என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அருகே விஷம் குடித்த பெண் சாவு
- பதறி போன அவர் வீட்டிற்கு வருவதற்குள் வைத்தீஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
- சிகிச்சை பலனின்றி நேற்று வைத்தீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே அச்சல்பாடி அடுத்துள்ள குடுமியாம்பட்டி பகுதிைய சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வைத்தீஸ்வரி (வயது48). இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளன.
இந்த நிலையில் தீபாவளி பண்டியையொட்டி அப்பகுதியில் சங்கர் இறைச்சி வியாபாரம் செய்து வந்தார். அப்போது வைத்தீஸ்வரி தனது கணவருக்கு போன் செய்தார். எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் உடனே வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தார். இதனால் பதறி போன அவர் வீட்டிற்கு வருவதற்குள் வைத்தீஸ்வரி விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனால் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வைத்தீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






