search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புற்றடி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த புற்றடி மாரியம்மன்.

    புற்றடி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

    • மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் சக்தி தலமான புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடக்க விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு அம்மன் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புற்றடி மாரியம்மன் சிறப்பு அபிஷேகம்,ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி பிரகார உலா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×