என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
பழனி கோவிலில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடக்கம்
- 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
- 5-ந்தேதி வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டா டப்படும் முக்கிய திருவிழா க்களில் ஒன்று நவராத்திரி விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்திசொற்பொழிவு, மங்கள இன்னிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர் 2.45 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும்.
மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்ய ப்படும். 5-ந்தேதி வழக்க ம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.