என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பழனி கோவிலில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடக்கம்
    X

    கோப்பு படம்

    பழனி கோவிலில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.
    • 5-ந்தேதி வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கொண்டா டப்படும் முக்கிய திருவிழா க்களில் ஒன்று நவராத்திரி விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வருகிற 26-ந்தேதி மலை க்கோவிலில் காப்பு கட்டு தலுடன் தொடங்கு கிறது.

    விழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்திசொற்பொழிவு, மங்கள இன்னிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவின் 9-ம் நாளான அக்டோபர் 4-ந்தேதி மலைக்கோவிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். பின்னர் 2.45 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்தி வேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மாலை 5 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணைஆணையர் நடராஜன், துணைஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி 9 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்ய ப்படும். 5-ந்தேதி வழக்க ம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×