search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டமங்கலத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மாயம்
    X

    திண்டமங்கலத்தில் பெண் கிராம நிர்வாக அலுவலர் மாயம்

    • கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.
    • அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி லதா (வயது 40). இவர் திண்டமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில், நேற்று காலை கீரம்பூரில் உள்ள கிராம நிர்வாக அலுவல கத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரியாவை சந்தித்து பேசி விட்டு வெளியே சென்றுள் ளார்.அப்போது, தனது செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே வைத்து விட்டு லதா சென்றுள்ளார்.

    இந்த நிலையில் லதாவின் கணவர் பூபதி, மாலை வரை தனது மனைவி வீட்டுக்கு வராதால் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பூபதி, பல்வேறு இடங்களில் லதாவை தேடி உள்ளார்.

    எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய் துள்ளேன். கிராம நிர்வாக அலுவலர் லதா, தானாக எங்காவது சென்று விட்டா ரா? அல்லது எவரேனும் கடத்திச் சென்று விட்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெண் கிராம நிர்வாக அலுவலர் திடீரென மாய மான சம்பவம் அந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×