என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் தறி தொழிலாளி மர்ம சாவு
- விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார்.
- இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (41). விசைத்தறி கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஷிப்டுக்கு போக வேண்டும் எனக்கூறி மாலை தூங்க சென்றார். இரவு வெகுநேரம் ஆகியும் வேலைக்கு செல்ல எழாததால் விஜயகுமாரை அவரது தாய் எழுப்ப சென்றார். அப்போது வாயில் நுரை தள்ளியபடி விஜயகுமார் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். இது குறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






