search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய  சோதனையில் அதிக பாரம் ஏற்றிய வாகனகள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு
    X

    போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றிய வாகனகள் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பு

    • பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலை மையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் கொண்ட குழுவினர் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலம் அருகிலுள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய தாக 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. அந்த வழியே வந்த ஜே.சி.பி வாகனத்தை நிறுத்தி ஆய்வு செய்யப்பட்டதில் அந்த வாகனத்திற்கு ஆண்டு வரி செலுத்தப்படாதது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த வாகனத்திற்கு அபராத தொகையுடன் சேர்த்து ரூ.13ஆயிரம் வரி வசூல் செய்யப்பட்டது. மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனத்திற்கு ரூ.30 ஆயிரம் இணக்க கட்டணம் வசூலிக்கும் பொருட்டு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.

    மேலும் தகுதிச் சான்று புதுப்பிக்கப்படாமலும் அனுமதி சீட்டு இல்லாமலும் அந்த வழியாக வந்த கனரக வாகனம் சிறை பிடிக்கப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×