என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செங்கோட்டில் வாகனம் மோதி ரிக் வண்டி உரிமையாளர் பலி
    X

    விபத்தில் பலியான ரிக் வண்டி உரிமையாளர் சங்கர்.

    திருச்செங்கோட்டில் வாகனம் மோதி ரிக் வண்டி உரிமையாளர் பலி

    • திருச்செங்கோடு கல்லுபாளையம் குடி தெருவை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் சங்கர் (வயது 32). ரிக் வண்டி உரிமையாளர்.
    • சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது மலைகாவலர் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சங்கர் மீது மோதியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கல்லுபாளையம் குடி தெருவை சேர்ந்தவர் அப்புசாமி. இவரது மகன் சங்கர் (வயது 32). ரிக் வண்டி உரிமையாளர்.

    விபத்து

    நேற்று இரவு சுமார் 11 மணிக்கு திருச்செங்கோடு நகர பகுதிக்கு வந்து விட்டு சங்கர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது மலைகாவலர் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் சங்கர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து சங்கரின் பாக்கெட்டில் இருந்த செல்போனை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். அதில் சங்கருக்கு திருமணம் ஆகி சூர்யா என்ற மனைவியும், நட்சத்திரா என்ற 2 வயது பெண் குழந்தை இருப்பதும், கல்லு பாளையத்தில் புதிய வீடு கட்டுவதால் மலைசுற்றி ரோட்டில் மனைவி குழந்தையுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

    கதறல்

    சங்கர் இறந்த தகவலை அவரது மனைவியிடம் போலீசார் தெரிவித்தனர். இதை கேட்டு அவர் கதறி அழுதார்.

    போலீசார் சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டிரைவர் மற்றும் வாகனம் குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×