என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கார் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
- நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
- சம்பவத்தன்று இரவு எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 50).
இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஜேடர்பாளையத்திற்கு பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் வேலகவுண்டம்பட்டியில் இருந்து நருவலூர் செல்லும் சாலையில் அணியார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
சிகிச்சை
இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிலுவம்பட்டி, ரெட்டியார் தெருவை் சேர்ந்த கார் டிரைவர் சேகர் (38) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்