என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் பகுதியில் திடீர் சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    பரமத்திவேலூர் பகுதியில் திடீர் சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

    • பரமத்திவேலூரில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்ன லுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
    • திடீர் மழையின் காரணமாக, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கூடச்சேரி, ஒத்தக்கடை, குன்னமலை, இரும்பு பாலம், நல்லூர், கந்தம்பாளையம், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பிரிக்கா பாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், தி. கவுண்டம்பாளையம், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, கபிலர்மலை, இருக்கூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல் பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்று, பலத்த இடி, மின்ன லுடன் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    திடீர் மழையின் காரண மாக, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். தொடர்ந்து வாட்டி வந்த கடும் வெயி லின் தாக்கம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வந்த நிலையில், மழையால் பூமியின் சீதோசண நிலை மாறி குளிர்ச்சியான சீதோசண நிலை ஏற்பட்டுள்ளது.

    மழையின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×