என் மலர்
உள்ளூர் செய்திகள்

மயில், காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பது எப்படி?
- தற்போது எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன.
- இவற்றை தடுப்பதற்கு ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி ஈச்சவாரி கிராமத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போது எருமப்பட்டி வட்டாரத்தில் மயில்களால் பல்வேறு வேளாண்மை பயிர்கள் சேதம் அடைகின்றன. இவற்றை தடுப்பதற்கு ஹெர்போலிவ் என்ற மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்தி ஈச்சவாரி கிராமத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஹெர்போலிவ் தெளிப்பதன் மூலம் மயில்கள், காட்டு பன்றிகள், மான்கள், முயல்கள், எலிகள், காட்டுப்பறவைகளை அண்டவிடாமல் பயிர்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகின்றது.இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டு உள்ளது. மேலும், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் வல்லுநர் சங்கர், எருமபட்டி பகுதி விவசாயிகளுக்கு இதுகுறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்து விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு விரிவாக விளக்க மளித்தார். வேளாண்மை உதவி இயக்கு நர் கவிதா முன்னிலையில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






