search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி .தேர்வுக்கு இலவச பயிற்சி
    X

    நாமக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி .தேர்வுக்கு இலவச பயிற்சி

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள் தற்போது நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்- 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    குரூப் -4 தேர்வில், 17 பேர் சான்றிதழ் சரிபார்ப் புக்கு தேர்வாகியுள்ளனர். 2022-ம் ஆண்டு சீருடைப் பணியாளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ளனர். மேலும் 2022 -ம் ஆண்டு போலீஸ் தேர்வில் 17 பேர் தேர்ச்சி பெற்று தற்போது பணியில் உள்ள னர். தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டிஎன்பி எஸ்சி குரூப் -1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 - 1.30 மணி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பாட வாரியாக சிறந்த வல்லு நர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேலும் இத்தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் ஒவ் வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெறுகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை தொலைபேசி எண்கள் மூலமோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன் பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் உமா கூறியுள்ளார்.

    Next Story
    ×