என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
- கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
- 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆர்.டி.ஓ. சுகந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் இம்மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி அன்று காலை 10 மணி அளவில் பரமத்திவேலூர் வர்த்தகர் சங்க திருமண மண்டபத்தில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.






