என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் ரெயில் நிலையத்தில்3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி
- ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப்பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
- சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பட்டு, நெய், சேகோ, கோழிப் பண்ணை போன்ற பல் வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாத்தலமான கொல்லி மலைக்கு செல்வற்கு முக்கிய சந்திப்பு இடமாக ராசிபுரம் ரெயில் நிலையம் இருந்து வருகிறது.
சேலம்-கரூர் அகல ரெயில்பாதையில் உள்ள ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் சில ரெயில்கள் மட்டுமே நின்று செல்கின் றன.கொரோனோ காலத்திற்கு முன்பு நின்று சென்ற ரெயில்கள் கூட அதன்பிறகு நிற்பதில்லை. இதனால் ராசிபுரம் பகு தியைச் சேர்ந்தவர்கள் வெளியூர் செல்ல அருகா மையில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்று செல்ல வேண்டி உள்ளது.
ஆகையால் ராசிபுரம் பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ராசி புரம் வழியாக செல்லும் சென்னை-பழனி எக்ஸ் பிரஸ் ரெயில், நாகர்கோ வில் -பெங்களூர் எக்ஸ்பி ரஸ் ரயில், நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ராசிபுரம் ரெயில் நிலை யத்தில் நின்று செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் கடந்த 15-ந் தேதி ரெயில்வே துறை தலைமை நிர்வாக அதிகாரிக்கு மனு ஒன்றை அளித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று தற்போது ரெயில்வே துறை ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ராமேஸ்வரம்-ஓகா வாராந்திர எக்ஸ்பிரஸ், சென்னை பாலக்காடு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல ரெயில்வே துறை அனுமதி அளித்துள் ளது. இதற்காக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பிக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.






