search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு
    X

    நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வு

    • நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
    • 191 தேர்வு மையங்களில் 56 ஆயிரம்பேர் எழுதுகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை 56,223 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக நாமக்கல் வட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 13,722 தேர்வர்களும், ராசி புரம் வட்டத்தில் 47 தேர்வு மையங்களில் 13,978 தேர்வர்களும், மோகனூர் வட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 2,239 தேர்வர்களும், சேந்தமங்கலம் வட்டத்தில் 17 தேர்வு மையங்களில் 4,318 தேர்வர்களும், திருச்செங்கோடு வட்டத்தில் 42 தேர்வு மையங்களில் 12,048 தேர்வர்களும், பரமத்திவேலூர் வட்டத்தில் 23 தேர்வு மையங்களில் 6,612 தேர்வர்களும், குமாரபாளையம் வட்டத்தில் 11 தேர்வு மையங்களில் 3,306 தேர்வர்களும் என மொத்தம் 132 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 191 தேர்வு மையங்களில் 56,223 தேர்வர்களும் போட்டித்தேர்வினை எழுதுகின்றனர்.

    இந்த தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 க்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தேர்வாணைய குழு உறுப்பினர் பாலுசாமி தலைமையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வின்போது அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த குறும்பட விளக்க காட்சி ஒளிபரப்பப்பட்டது.

    Next Story
    ×