என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் புத்தகத் திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
    X

    நாமக்கல் புத்தகத் திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

    • நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் வடக்கு நல்லி பாளையம் அரசு மேல்நி லைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா வில் 80 அரங்குகள், சொற்பொழிவு கள், பட்டி மன்றம், குழந்தை களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திரு விழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண் காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நடைபெற்று வருகிறது.

    புத்தகத் திருவிழா இன்று டன் நிறைவு பெறுவ தாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.

    இதையடுத்து, நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (12-ந் தேதி) இந்த புத்தகத் திரு விழா நடை பெறும். எனவே பொது மக்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கல்வியா ளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்ப டுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிப் படித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×