என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூணாறு பஸ் விபத்து: மாணவிகளின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன- உறவினர்கள் கண்ணீர்
    X

    மூணாறு பஸ் விபத்து: மாணவிகளின் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன- உறவினர்கள் கண்ணீர்

    • கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கலைக்கல்லூரியை சேர்ந்த 34 மாணவ-மாணவிகள் மற்றும் 3 பேராசிரியர்கள் ஆனந்தமாக சென்ற சுற்றுலா சோகத்தில் முடிந்து உள்ளது.

    கேரள மாநிலம் மூணாறுக்கு அவர்கள் சென்ற பஸ் மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் பலியானதே இந்த சோகத்திற்கு காரணம்.

    மூணாறு வட்டவடை பகு தியை பார்வையிட சென்ற போது தான் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் அஞ்சுகிராமம் கனகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகள் வேனிகா (வயது 19), திங்கள் சந்தை அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த ராமு மகள் ஆத்திகா (18) சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

    35 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட 4 பேரில் ஒரு மாணவர் இறந்து விட்டார். அவரது பெயர் சுதன் (19).

    இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தின ரிடையே மட்டுமின்றி அவர்கள் படித்த கல்லூரியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சுற்றுலா முடிந்து சந்தோஷமாக ஊருக்கு வருவார்கள் என பெற்றோர் நினைத்திருந்த நிலையில், அவர்களது மரணச் செய்தி வந்தது பலியான மாணவ-மாணவிகளின் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    அவர்கள் தங்கள் குழந்தைகளின் தோழிகள் செல்போன்களுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த தகவலும் உடனடியாக கிடைக்கவில்லை. இதற்கிடையில் கல்லூரியில் இருந்து விபரம் கிடைக்கப் பெற்று பலியான மாணவிகளின் பெற்றோர் இங்கிருந்து புறப்பட்டு மூணாறு விரைந்தனர்.

    அவர்கள் தங்கள் மகள்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். மூணாறு ஆஸ்பத்திரியில் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் சொந்த ஊருக்கு கொண்டு வந்தனர்.

    இந்த தகவல் கிடைத்ததும் 2 மாணவிகளின் வீடுகளிலும் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியினர் திரண்டனர். அவர்கள் சோகத்துடன் கண்ணீர் வடித்தபடி அங்கிருந்தனர்.

    பலியான ஆதிகாவின் தந்தை ராமு, திருவிழா கடையில் மிட்டாய் செய்யும் தொழிலாளி. இவரது மற்றொரு மகள் மணவாளக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். தனது கஷ்டமான சூழ்நிலையிலும் மகள்களை ராமு நன்றாக படிக்க வைத்துள்ளார்.

    இதனை தற்போது நினைவு கூர்ந்த உறவினர்கள், ஆத்திகாவின் கல்லூரி படிப்பு இன்னும் ஓராண்டில் முடிந்து விடும். அதன்பிறகு வேலைக்குச் சென்று குடும்பத்தின் கஷ்டம் தீர உதவியாக இருப்பார் என அனைவரும் நினைத்த நேரத்தில், பஸ் விபத்தில் அவர் இறந்து விட்டார் என்ற தகவல் இடியாக விழுந்துள்ளது எனறனர்.

    விபத்தில் பலியான மற்றொரு மாணவி வேனிகாவும் ஏழ்மையான குடும்ப த்தை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ரமேஷ், கட்டிட தொழிலாளி. இவரும் தனது 3 குழந்தை களையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். இதில் மூத்தவர் தான் பலியான வேனிகா. படிப்பில் திறமையான இவர், அனைவரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பழகுவார் என உறவினர்கள் வேதனையுடன் கூறினர்.

    இதேபோல் தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவர் சுதன் உடலும் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து உடலை வாங்கிய உறவினர்கள், சொந்த ஊரான ஏர்வாடிக்கு புறப்பட்டனர்.

    Next Story
    ×