என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பென்னாகரம் அருகே முனியப்பன் கோவில் திருவிழா
- பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றது.
- பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரத்தில் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற முனியப்பன் கோவிலில் திருவிழா நடைப்பெற்றது.
இக்கோவில் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பனியையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.
மேலும் இந்த விழாவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு மார்கழி 1-ம் தேதியில் இருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டும், அலகு குத்திக் கொண்டும் ஊர்வலமாக கோவிலிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதனால் இங்கு பென்னாகரம் காவல் துணை சூப்பிரண்டு இமயவர்மன் பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.
மேலும் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவு நேரங்களில் வானவேடிக்கை நிகழச்சியும் நடைப்பெற்றது. மேலும் இவ்விழாவில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை விற்பனை செய்தனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, தக்கார். ஆய்வாளர் உத்தரவின் பேரில் செயல் அலுவலர் சிவக்குமார் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்