search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் 134 அடியாக உயர்ந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
    X
    முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

    தொடர் மழையால் 134 அடியாக உயர்ந்த முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்

    • மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது

    கூடலூர்:

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள், குளம், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.05 அடியாக உள்ளது. 1739 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 70.69 அடியாக உள்ளது. அணைக்கு 2027 கனஅடிநீர் வருகிறது. 1319 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 408 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து பாசனத்திற்கு 40 கனஅடிநீரும், உபரியாக 368 கனஅடிநீரும் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 135 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 6.2, கூடலூர் 17.6, உத்தமபாளையம் 9.4, வைகை அணை 48, மஞ்சளாறு 8.6, சோத்துப்பாறை 12, ஆண்டிபட்டி 33.4, அரண்மனைப்புதூர் 4.5, போடி 4.8, பெரியகுளம் 9 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×