என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் சென்டர் மீடியனில் மோதி ஆடிட்டர் சாவு
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
- தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது58). இவரது மகன் சிரஞ்சீவி (32).
ஆடிட்டரான இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஜின்சுபள்ளி அருகே சென்றார்.
அப்போது திடீரென்று வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிரஞ்சீவி தலையில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து சிரஞ்சீவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






