search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலத்தில்   மோட்டார் சைக்கிள்கள் மோதல்- இளம் பெண் பலி4 பேர் படுகாயம்
    X

    சின்னசேலத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- இளம் பெண் பலி4 பேர் படுகாயம்

    • ஜனனி (வயது 21) இவர் மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தபோது,எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது
    • இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஜனனி (வயது 21) இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் திம்மாபுரம் கிரா மத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். சின்னசேலம் மின்சார அலுவலகம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்

    அப்போது தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பேரக்குழந்தைகளான பார்கவி (வயது 12)வெற்றி மாறன் (வயது 7)ஆகியோ ருடன் இருசக்கர வாக னத்தில் வந்தார். எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது. இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5பேரும் சேர்க்கப்பட்டனர். ன்னர் ஜனனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஜனனி பரிதாப மாக இறந்து போனார். இது குறித்து ஜனனி தந்தை சின்ன துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×