என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரவாயலில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழப்பு
- என்ஜினீயர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
- சாலையோரத்தில் இரும்பு கம்பி லோடுடன் நிறுத்தப்பட்டு இருந்த டிரெய்லர் லாரி ஒன்றின் மீது சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது.
போரூர்:
சென்னை குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பூந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 26) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.
வானகரம் அருகே வந்தபோது சாலையோரத்தில் இரும்பு கம்பி லோடுடன் நிறுத்தப்பட்டு இருந்த டிரெய்லர் லாரி ஒன்றின் மீது சுரேஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ண குமார் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story