என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்
- 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- பதறிபோன விஜய் கணபதி தனது மனைவி, 2 குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கக்கன்ஜி புரத்தைச் சேர்ந்தவர் விஜய்கணபதி. இவர் வெல்டிங் பட்டறையில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி கவுசல்யா (வயது 24) என்ற மனைவியும், ஜெயபிரீத்தி (7), ஜீவிதா என்ற (4) என்ற மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி 2 குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற கவுசல்யா மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதனால் பதறிபோன விஜய் கணபதி தனது மனைவி, 2 குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து விஜய்கணபதி பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






