search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை
    X

    தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை

    • தியாகதுருகம் அருகே 3 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்த மயிலவன் மனைவி விஜயலட்சுமி (வயது 22) இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வயிற்று வலியின் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது பருத்தி வயலுக்கு சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். தொடர்ந்து தனது தந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்த இவரது அண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது அங்கே மயங்கி நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு விஜயலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து மணிவேல் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×