search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 குழந்தைகளுடன் தாய் மாயம்
    X

    3 குழந்தைகளுடன் தாய் மாயம்

    • சம்பவத்தன்று வீட்டில் செவ்வந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி செவ்வந்தி (வயது30). இருவருக்கும் திருமணமான நிலையில் மகன் கவியரசு (10) , காவியா (7), நதியா (5) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    சம்பவத்தன்று வீட்டில் செவ்வந்தி சமையல் செய்யாமல் இருந்துள்ளதால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பசுபதி தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக சென்றார். திரும்பி வந்து பார்க்கும் போது மனைவியும், 3 குழந்தைகளும் காண வில்லை. பெற்றோர்கள் உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மயமான 4 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×