என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணிப்பாக்கம் சிறுவாக்கம் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்
    X

    வண்ணிப்பாக்கம் சிறுவாக்கம் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்

    • வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வந்தனர்.
    • பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள கல்வெட்டை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் வண்ணிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் மூகாம்பிகைநகர் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

    இந்நிலையில் தகவல் அறிந்து வந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சேர்மன் ரவி ஆகியோர் ஆய்வு செய்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மழைநீர் கால்வாய் தூர்வாரி மழை நீரை அகற்றினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், துணைத்தலைவர் சித்ரா ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் இருந்தனர்.

    அப்போது அப்பகுதி மக்கள் பொன்னேரி மீஞ்சூர் நெடுஞ்சாலை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள கல்வெட்டை அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×