search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி- அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சிவசங்கர் வழங்கினர்
    X

    அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி- அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சிவசங்கர் வழங்கினர்

    • 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன் வரவேற்றுப் பேசினார்.
    • வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு. க. சார்பில் செம்மஞ்சேரி 200-வது வட்ட செயலாளர் இரா. நாகராஜ் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவிந்த ரமேஷ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். 200-வது வார்டு கவுன்சிலர் அ. முருகேசன், வரவேற்றுப் பேசினார்.

    பகுதி துணை செயலாளர் வி.தனசேகரன், பொருளாளர் பி. ரவி, மாவட்ட பிரதிநிதி ஹரி, சங்கர், செந்தில்குமார், புஷ்பா, ராஜேந்திரன், ஆர். தேவேந்திரன், சேகர், எஸ். தேவேந்திரன், முனுசாமி, ராஜி, அருண், பிரகாஷ், பிரவீன் ஆகியோர் வரவேற்பளித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.எஸ். சிவசங்கர், மா. சுப்பிரமணியன், தலைமை கழகப் பேச்சாளர் ஆலந்தூர் மலர்மன்னன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட துணை செயலாளர் பாலவாக்கம் மு. மனோகரன், 14 -வது மண்டல குழு தலைவர் பெருங்குடி எஸ்.வி. ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் ஜி. வெங்கடேசன், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே. ஏழுமலை, தா. பஷீர், ஆ. அரிகிருஷ்ணன், மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சி. பிரதீப், முன்னாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் என். குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட துணை செயலாளர் முருகன், வட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×