search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடம் கரையோரப் பகுதியில் அமைச்சர் ஆய்வு
    X

    ஆற்றின் கரை பகுதியை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு.

    கொள்ளிடம் கரையோரப் பகுதியில் அமைச்சர் ஆய்வு

    • கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்ந டைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.
    • அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    சீர்காழி,

    கர்நாடகா மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை அணை எட்டியது.

    இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றல் திறந்து விடப்படுகிறது.

    கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ள நிலையில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

    இதனால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் திறப்பு அதிகரி த்துள்ளதால் கொள்ளிடம் ஆற்று பகுதியில் உள்ள திட்டு கிராம ங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல், கோரத்திட்டு உள்ளிட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கிராம மக்கள் தங்களது உடைமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமத்தை விட்டு ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.

    நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் அத்தியாவசியமான பொருட்களை எடுத்துக் கொண்டு ஆற்றின் கரை மற்றும் முகாம்களை நோக்கி வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.

    ஆற்றின் கரை பகுதியில் மேடான பகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்தும் நேற்று இரவிலிருந்து சிலர் தங்கி உள்ளனர்.

    வருவாய்த்துறை சார்பில் நான்கு இடங்களில் முகாம் அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில்.முகாம்களுக்கு அமைச்சர் நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    மக்களுக்கு தேவையான சுகாதார வசதி, உள்ளிட்ட உதவிகளை செய்திட மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் அறிவுறுத்தினார்.

    பின்னர் முதலை மேடுதிட்டு கிராமத்திற்கு நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக மேடான பகுதிக்கு வருமாறும் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு ஓட்டிச் சென்று பாதுகாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அதன்பின்னர் அளக்குடி பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் மெய்யநாதன் ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளதால் கரையின் பாதுகாப்புத் தன்மை குறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட சந்தபடுகை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி சுமதியிடம் அமைச்சர் நிதி உதவி வழங்கினார்.

    மாவட்ட கலெக்டர் லலிதா, எம் .எல். ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதாமுருகன், சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய செயலாளர்கள் செல்லசேதுரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பி.டி.ஓ சரவணன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×