search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜாம்புவானோடை தர்காவில் அமைச்சர் ஆய்வு
    X

    ஜாம்புவானோடை தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.

    ஜாம்புவானோடை தர்காவில் அமைச்சர் ஆய்வு

    • தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடம் ஆய்வு.
    • பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்து கேட்டறிந்தார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவின் நான்கு புறமுள்ள நடைப்பாதைகள் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காவல் நிலைய இடத்தையும், மேலும், தர்காவிற்கு வரும் பக்தர்களின் பயன்பா ட்டிற்காக உள்ள கழிவறைகள் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்தும், பக்தர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீர் வசதி குறித்தும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாரிமுத்து எம்.எல்.ஏ., மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, மாவட்ட சிறுபான்மையினர் அலுவலர் பாலசந்தர், தாசில்தார் மலர்கொடி மற்றும் தர்கா டிரஸ்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இதில் தர்கா கமிட்டி சார்பில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன், எஸ்.பி.டி. ஐ. தலைவர் பகுருதீன் ஆகியோர் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×