search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்
    X

    தற்கொலை செய்த சுடலைமாடன் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறிய போது எடுத்த படம்.

    தற்கொலை செய்து கொண்ட தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

    • விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • சுடலைமாடனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சுடலை மாடனிடம் அவரது பதவி உயர்வு, சாதி குறித்து பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.

    இதையடுத்து கடந்த 17-ந்தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி உயிரிழந்தார்.

    சுடலைமாடனின் சாவுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என இவரது உறவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப் பட்டது.

    சுடலைமாடன் குடும்பத் திற்கு ரூ.12 லட்சம் அரசு உதவி, அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனால் சுடலை மாடன் உடலை வாங்கி உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில் சுடலை மாடன் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தமிழக தூய்மை பணியாளர் இணைய துணைத்தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கினார்.திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமி நாதன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ் பேகம், அன்புராணி, ஆபித், பிரதீப் கண்ணன், பஷீர், சரஸ்வதி பங்காளன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மீராசி ராசூதீன், மகாவிஷ்ணு, ரவிராஜா, முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், ஓன்றிய செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், சதீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×