என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி
- காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிறுதானிய கண்காட்சி நடைபெற்றது.
- கண்காட்சியில் மாணவிகள் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
காரிமங்கலம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுதுறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பாக சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப் பொருள்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். இதில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் செந்தில்குமார், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். மேலும் கம்பு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, கேழ்வரகு, சோளம் மற்றும் கொள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களில் இயற்கையாகவே புரதம், நார்சத்து, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், காப்பர் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத் துக்கள் உள்ளன. இவற்றில் செய்யும் உணவு வகைகள் எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.
முக்கியமாக மனிதர்களை பாதிக்கும் பல நோய்களிலிருந்து பாதுகாக் கக்கூடிய தன்மையும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க சிறு தானியங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கண்காட்சியில் எடுத்து ரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு கௌரவ விரிவுரை யாளர்கள் பிரியா, விஜயலட்சுமி, மதுவந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோர் செய்து இருந்தனர்.






