search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இணையதளம் வழியாக செலுத்திய மின் கட்டணம் -  திரும்ப கிடைக்கவில்லை என மில் உரிமையாளர் புகார்
    X

    இணையதளம் வழியாக செலுத்திய மின் கட்டணம் - திரும்ப கிடைக்கவில்லை என மில் உரிமையாளர் புகார்

    • ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார்.
    • மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த நூல் மில் உரிமையாளர் விஸ்வநாதன் .இவர் தனது மில்லுக்கு பயன்படுத்திய மின்சாரத்திற்கு கட்டணம் ரூ.45.225யை ஜனவரி மாதம் 20 ந்தேதிக்குள் செலுத்த மின்சார வாரியம் அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில் கடந்த ஜனவரி 19ந்தேதி அன்று ரூ.45,225 இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆனால் மின்வாரிய இணையத்தளத்தில் பணம் வரவு ஆகவில்லை.

    இதையடுத்து வங்கியில் கேட்டபோது, இணையதள சர்வர் கோளாறு, அதனால் பணம் வரவாகவில்லை என்று கூறியுள்ளனர். இதையடுத்து நேரடியாக மின்வாரிய அலுவலகம் சென்று மின் கட்டணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் வங்கி நிர்வாகத்திடம் தான் கட்டிய பணத்தை திரும்பப் பெற புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் மின்வாரிய கணக்கிற்கு தொகை சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மின்வாரிய அலுவலகத்தில் தான் இருமுறை மின் கட்டணத்தை செலுத்தியது குறித்தும், தனது பணத்தை திரும்பப் தரக்கோரி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மின்வாரிய அதிகாரிகள், இங்குள்ள மின்வாரிய கணக்குகளில் உங்களது பணம் வரவாகவில்லை.

    சென்னை தலைமை அலுவலகத்தை கேட்டு விவரம் சொல்கிறோம் என கூறியதாக கூறப்படுகிறது. மின் கட்டணத்தை முறையாக செலுத்தியும், வீண் அலைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், உடனடி நடவடிக்கை எடுத்து தனது பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று மில் உரிமையாளர் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×