search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. மோதல்
    X

    கோப்பு படம்

    எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க.-அ.ம.மு.க. மோதல்

    • கட்சி நிர்வாகிகள் கார சாரமாக மோதிக்கொண்ட நிலையில் கொடிக்கம்பங்களையும் மாற்றி மாற்றி பறித்து எறிந்தனர்
    • அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பதட்டமான சூழல் உருவானது.

    ஆண்டிபட்டி:

    தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. சார்பாக வும், அ.ம.மு.க. சார்பாகவும் கட்சி க்கொடிகள் ஊன்றப்பட்டு இருந்தன. இந்நிலையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அ.ம.மு.க. நிர்வாகிகளும் மாலை அணிவிக்க வந்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கட்சி நிர்வாகிகள் கார சாரமாக மோதிக்கொண்ட நிலையில் கொடிக்கம்பங்களையும் மாற்றி மாற்றி பறித்து எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார் இருதரப்பின ரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை கேட்காமல் அ.தி.மு.க., அ.ம.மு.க. நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் பதட்டமான சூழல் உருவானது.

    Next Story
    ×