search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி சாவு
    X

    கோப்பு படம்

    வேடசந்தூர் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி சாவு

    • பாளையத்தில் இருந்து வெள்ளியணை செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு வியாபாரி பலியானார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). மாட்டு வியாபாரி. இவருக்கு திருமணமாகவில்லை.

    தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மாயமானார். இந்நிலையில் பாளையத்தில் இருந்து வெள்ளியணை செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

    இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×