என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேவதானப்பட்டியில் பைக் மீது கல்லூரி பஸ் மோதி வியாபாரி பலி
- வியாபாரி மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார்.
- கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது35). ஐஸ் வியாபாரி. இவருக்கு சந்தியா (33) என்ற மனைவியும், வீரலட்சுமி (15), அன்புலட்சுமி (12), தங்க லட்சுமி (10) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று மாலை மருதமுத்து மோட்டார் சைக்கிளில் டி.வாடிப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து பெரியகுளம் நோக்கி வந்த கல்லூரி பஸ் அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மருதமுத்து படுகாயங்களுடன் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி பஸ்சை ஓட்டி வந்த காமாட்சிபுரம் செல்லப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்