search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நட்டாத்தி ஊராட்சியில் மருத்துவ காப்பீடு சேவை முகாம்
    X

    மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடைபெற்ற காட்சி.


    நட்டாத்தி ஊராட்சியில் மருத்துவ காப்பீடு சேவை முகாம்

    • நட்டாத்தி ஊராட்சி‌ சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது.
    • நட்டாத்தி ஊராட்சி‌ பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சி சேவை மையத்தில் மருத்துவ காப்பீடு சேவை முகாம் நடந்தது. இதில் பிரதம மந்திரி ஆயுஷ் மான் பாரத் மற்றும் முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு ரூ.5லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு நட்டாத்தி ஊராட்சி பஞ்சாயத்து தலைவர் சுதாகலா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் அன்னகனி , பிரியா, சரோஜா, மணிமந்திரம்.திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி , சண்முகா டிஜிட்டல் ஜெராக்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து பயன் பெற்றனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயல்அலுவலர் முத்துராஜ் செய்து இருந்தார்.

    Next Story
    ×