என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வத்தலக்குண்டுவில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
    X

    முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    வத்தலக்குண்டுவில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

    • வத்தலக்குண்டு லியேனார்டு ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தலைமையிலானமருத்துவக் குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டுவில் வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்குசிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாம் தொடக்க விழாவுக்கு வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர்சிதம்பரம் தலைமை வகித்தார்.

    வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, வத்தலக்குண்டு பேரூராட்சி துணைத் தலைவர் தர்மலிங்கம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் குத்து விளக்கு ஏற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    வத்தலக்குண்டு லியேனார்டு ஆஸ்பத்திரி டாக்டர் ராம்குமார் தலைமையிலானமருத்துவக் குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் வத்தலக்குண்டு பேரூராட்சி தலைமை எழுத்தர்செல்லப்பாண்டி, நிலக்கோட்டை சுகாதார ஆய்வாளர் சடகோபி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணியாளர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.முடிவில் வத்தலக்குண்டு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் சரவண பாண்டியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×