என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
- முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.
- 97 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், 47 நபர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கப் பட்டது.
தருமபுரி,
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்று த்திறனாளிகள் துறை சார்பில் தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, அரூர் ஆகிய இரண்டு இடங்களில் மாற்று திறனாளிகள் துறை சார்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் நேற்று தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் 224 மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர். 97 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டையும், 47 நபர்களுக்கு நலவாரிய அட்டையும் வழங்கப்பட்டது. 154 நபர்களுக்கு UDID, கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை மற்றும் இதர துறைசார்ந்த உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்த முகாமில் அரசு சிறப்பு மருத்துவர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், பணியாளர்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.






