search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 3-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீப காலமாக காதல் திருமணம் செய்பவர்கள் படுகொலை செய்யப்படுவது வருத்தம், வேதனையளிக்கிறது. குறிப்பாக, இங்குள்ள பட்டியலின மக்கள் தாக்கப்பட்டு வருகின்றனர்.

    இது போன்ற குற்றங்கள் நிகழும், இந்த மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு கடுமையான இயக்கத்தை நடத்திட முடிவு செய்துள்ளது. வருகிற மே 3&ந் தேதி கிருஷ்ணகிரியில், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆணவ படுகொலைக்கு எதிராக தடுப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு, தமிழக அரசு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க. அமைச்சர்கள் மீது அண்ணாமலை ஊழல் புகார் கொடுப்பதற்கு, அவருக்கு அடிப்படை தகுதி உள்ளதா. மேலும், அவர் ஊழல் புகார் கொடுப்பார் என பார்த்தால், சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    இதை அவர்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளது தான். வலைதளத்தில் உள்ளதை தொகுத்து கொடுப்பதற்கு ஒரு அண்ணாமலை தேவையா. ஊழலுக்கும், சொத்துக்கும் அண்ணாமலைக்கு வித்தியாசம் தெரியாதா. தமிழக கவர்னருக்கு எதை பேசுவது, எதை பேசக்கூடாது என்றே தெரியவில்லை.

    மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதவை உரிய காலத்திற்குள் முடிவெடுத்து கொடுக்க வேண்டும் என்பதுதான் கவர்னரின் பணி. ஆனால் 15 மசோதாக்கள் ஒன்றரை ஆண்டுகள் கிடப்பில் உள்ளது. எந்த வேலையை செய்ய வேண்டுமோ அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய்தால், கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவராகவோ, பா.ஜ.க. தலைவராகவோ வாங்க.

    கவர்னராக இருந்து கொண்டு என்ன வேண்டுமானாலும் பேசக் கூடாது. காரணம் பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களை இப்படி கவர்னர்களை பயன்படுத்தி ஆட்டம் போட வைக்கும் ஏற்பாடுதான். இது அரசாங்கத்தையே முடக்கி வைப்பது ஆகும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது அந்த கட்சியின் மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாதர் சங்க செயலாளர் ஆஞ்சலா மேரி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×