search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான  வகுப்பறை கட்டும் பணி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான வகுப்பறை கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    விளாத்திகுளம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வகுப்பறை கட்டும் பணி - மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.
    • பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜே.எஸ்.டபுள்யூ. நிறுவனம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி நேற்று தொடங்கியது.

    மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணை தலைவர் வேலுச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல், ஜே.எஸ்.டபுள்யூ நிறுவனம் சார்பில் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.27 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×