என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மகுடஞ்சாவடியில் மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
- மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது.
மகுடஞ்சாவடி:
சேலம் அருகே மகுடஞ்சாவடி மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 19-ந்தேதி பூச்சாட்டுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மகுடஞ்சாவடி மளிகை கடைக்காரர்கள் சங்கம் சார்பில் மெரவணை நடைபெற்றது.
இன்று பருத்தி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், நாளை (வியாழக்கிழமை) சிம்ம வாகனத்தில் அம்மனுக்கு மெரவணை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலை பொங்கல் பண்டிகை, ரத உற்சவம் நடைபெற உள்ளது. 7-ந்தேதி வெற்றிலை வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 8-ந்தேதி அகரம் வெள்ளம் செட்டியார் சங்கம் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்கம் சார்பிலும், 10-ந்தேதி ஊர் மெரவனையும் நடைபெற உள்ளது. 11-ந்தேதி மஞ்சள் நீராட்டமும் அம்மன் குடிபுகுதலும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பட்டினை தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்