search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் பஸ் நிலையத்தில் ஆண் பிணம் மீட்பு
    X

    ஆத்தூர் பஸ் நிலையத்தில் ஆண் பிணம் மீட்பு

    • 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதை பார்த்த பொதுமக்கள் ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் தங்கும் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் ஆத்தூர் நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில், பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராவை ஆய்வு செய்தபோது, இறந்தவருடன் 2 பேர் வந்துள்ளனர். 3 பேரும் மது போதையில் சிறுவாச்சூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது, நடத்துனர் அவர்களை பஸ்சில் ஏற்ற மறுப்பது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×