search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டுக்கு தொடக்கம்
    X

    அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

    மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டுக்கு தொடக்கம்

    • குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுக்கும் வசதி.
    • சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நகர்த்தக்கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பயன்பாட்டை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    இதன் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் குழந்தைகள் இருக்கும் இடத்திற்கே நகர்த்தி சென்று எக்ஸ்ரே எடுத்து பச்சிளம் குழந்தைகளின் உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள இயலும்.

    ஒரு முறை எக்ஸ்ரே எடுத்தால் பின்னர் தேவைப்–படும் உடல் பகுதியை தனித்தனியாக கணினி மூலம் பார்த்து எக்ஸ்ரே பகுத்தாய்வு செய்து கொள்ளும் வசதியுடன் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    Next Story
    ×