search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது
    X

    கைது செய்யபட்ட மனோகர்.

    தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது

    • அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர்.
    • 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அடுத்து செம்பனார்கோயில் காவல் நிலைய எல்லைக்குள் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையராஜா, ரமேஷ் மற்றும் போலீசார் நரசிம்ம பாரதி. அசோக் குமார், செந்தில், கார்த்திக், விஜயன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்ப டையில் விசாரித்தனர். விசாரணையில் அவர் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் மேலபாதியை தெற்கு தெருவை சேர்ந்த மனோகர் (வயது 40) என்பதும் அவர் மயிலாடுதுறையில் 2 மோட்டார் சைக்களிலும், மணல்மேட்டில் ஒரு மோட்டார் சைக்கிள், செம்பனார் கோயிலில் பகுதியில் 2 மோட்டார் சைக்கிள் திருடியது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 5 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×