என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூரில் ஆன்லைனில் வாலிபரிடம் ரூ.17.25 லட்சம் மோசடி
- வாட்ஸ் அப்பில், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்–துடன் கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது.
- மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு–களில் ரூ.17.25 லட்சம் பணம் செலுத்தி–யுள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துறைஸ் நகரைச் சேர்ந்தவர் தியாகு.
இவரது செல்போன் வாட்ஸ் அப்பில், குறைந்த முதலீட்டில் அதிக லாபத்–துடன் கமிஷன் கிடைக்கும் என்று குறுந்தகவல் வந்தது.
அதனை நம்பிய தியாகு, அந்த குறுந்தகவலில் இருந்த நிறுவனத்தின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண்ணில் பேசிய மர்ம நபர், இதற்காக பணம் முதலீடும் செய்தால் கோடி கணக்கில் லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தியாகு, அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு–களில் ரூ.17.25 லட்சம் பணம் செலுத்தி–யுள்ளார். அதன்பின்னர் அந்த மர்ம நபரை தியாகு தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்–பட்டதை அவர் அறிந்தார். இதுகுறித்து தியாகு கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரி–வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகின்றனர்.






