என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது
    X

    வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது

    • 3 பேருமே பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகின்றனர்.
    • பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் ஜானப்பர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 45). இதே பகுதியை சேர்ந்தவர்கள் தேவராஜ், கணேசன்.

    இவர்கள் அனைவரும் உறவினர்கள். மேலும் 3 பேருமே பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தேவராஜுக்கும் பாபுவுக்கும் இடையே தொழில் தொடர்பான போட்டி இருந்து வந்தததாக கூறப்படுகிறது.

    நேற்று இதன் எதிரொலியாக பாபுவை தேவராஜும், கணேசனும் வழிமறித்து தாக்கி பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்து ஓசூர் தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள பாபு ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில் தேவராஜும், கணேசனும் தன்னை கொள்ள முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர், கணேசனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×