என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
- கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது36). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (30).
இவர்களுக்கு 12 ஆண் டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கணவரை பிரிந்து பேரண்டப்பள்ளி அருகே கதிரேப்பள்ளியில் சுஜாதா தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் தேன்கனிகோட்டை பேட்டராய சாமி கோவில் அருகே சுஜாதா நடந்து சென்றார். அங்கு வந்த சுரேஷ் அவரிடம் தகராறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதில் சுஜாதா படுகாய மடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுரேசை கைது செய்தனர்.






