என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது
    X

    பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது

    • 2 பேர் மாட்டு கொட்டகையில் பெண்ணை கற்பழிக்க முயன்றனர்.
    • அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வருவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் கடந்த 2-ம் தேதி இரவு 7 மணிக்கு கொட்டகையில் மாடு கட்டிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி (31), அவரது நண்பர் ராசிபுரம் தமிழரசன் ஆகிய இருவரும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். இதனால் அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வருவதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் கடத்துார் போலீசார் வெள்ளிங்கிரியை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள தமிழரசனை தீவரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×