search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் அருகே அழுகிய நிலையில்  கிடந்த ஆண் எலும்பு கூடு
    X

    அடையாளம்  தெரியாத எலும்புக்கூடு

    காரைக்கால் அருகே அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்பு கூடு

    • புதர் ஒன்றில், அழுகிய நிலையில், எலும்புக் கூடாக ஆண் நபரின் சடலம் கிடந்தது.
    • உடலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நிரவி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, கருக்களாச்சேரி மீனவ கிராமத்தில் உள்ள தனியார் இறால் பண்ணை மற்றும் அக்கரை வட்டம் சுடுகாட்டுக்கு இடையே உள்ள புதர் ஒன்றில், அழுகிய நிலையில், எலும்புக் கூடாக 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நபரின் சடலம் கிடந்தது. இது குறித்து ஜெகதீசன் என்பவர் நிரவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அழுகிய நிலையில் கிடந்த எலும்புக்கூடுகள் மற்றும் நீல நிற ஆடை மற்றும் உடைகளை கைப்பற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் குறித்து விவரம் தெரியாததால், அண்மையில் 45 முதல் 50 வரை வயது வரையி லான காணாமல் போன வர்களின் விவரம் தெரிந்தவர்கள்,உடல் மற்றும் உடை, காலனி மற்றும் பொருட்களைக் கண்டு அடையாளம் கூற வேண்டுகிறோம். என இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி அழைப்பு விடுத்து ள்ளார்.

    Next Story
    ×