search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்காச்சோளம் விலை உயர்வு
    X

    மக்காச்சோளம் விலை உயர்வு

    • பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை, கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • கதிர் நன்றாக வளர்ந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து, உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர், குப்பிரிக்கா பாளையம், பெருங்குறிச்சி, சுள்ளிப்பாளையம், கவுண்டம்பாளையம், திடுமல், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், சின்ன மருதூர், பெரிய மருதூர், பாகம்பாளையம், பிலிக்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தில் மக்காச்சோளத்தை, கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். கதிர் நன்றாக வளர்ந்த மக்காச்சோளத்தை அறுவடை செய்து, உள்ளுர்

    பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் மக்காச் சோளத்தை தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு வாங்கி, பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்கள், மாடு ,கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.18 க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால், ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20 வரை விற்பனை யானது. விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×