search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.

    • திருப்பரங்குன்றம் கோவிலில் தங்கத்தேர் இழுத்து ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. வழிபாடு செய்தார்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பூச்செண்டு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து கொண்டு சென்ற பிரசாதங்களை வழங்கினார். அவருடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்சத்யன், இளைஞரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், விக்டர் ஆகியோரும் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு தொகுதி, மேலூர் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×